புதன், 10 ஜூன், 2009

கூலி ஏர்

நடவுக்காலங்களில்
ஏர்களுக்கு ஏக கிராக்கி

டிராக்டர்களால்
ஏர் உழவு அருகினாலும்
அதில்தான் சேறு நிறையும்...

அந்தியில் வீடேகி
அப்பாவை ஏர்கேட்டு
பெரும்புள்ளிகள்(?)
முகதாட்சண்யம் பார்க்கும்

எத்தனை கிராக்கியிலும்
ஆளுக்கு ஒருநாளாவது ஏரோட்டுவார்

ஆனால், முப்பது ரூபாய் கூலிதர
நிலக்கிழார் நீலமேகரெட்டி
மூன்று தவணைகளாவது ஆகும்...

ஒவ்வொரு முறையும்
அடுத்த போகத்தில் அவருக்கு
ஏரோட்டுவதில்லை என்கிறார்;
கூலி ஏரோட்டியால்
அப்படி முடிவெக்க
எந்த -அடுத்தபோகத்தில்- முடிகிறது...?
******
(சுப.வீரபாண்டியனின் 'நந்தன்' ஏப்ரல் 16-30, 1999 இதழில் வெளிவந்தது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக