சனி, 4 ஜூலை, 2009

மூன்று கவிதைகள்


வீட்டுக்கு வீடு
மனிதர்கள் வாழ்கிறோம்;
பாதுகாப்பிற்கு வளர்க்கிறோம்
நாய்கள்...!
******

முதலாளிகள் மட்டுமன்றி
வேடிக்கை பார்ப்பவனுக்கும்
பிடித்திருக்கிறது
வேலை செய்பவனை...
******

சாலையைக் கடக்க
காத்திருந்தவர்களுக்காக
முதல் ஆளாய் நிறுத்தினேன்
வண்டியை –
என்னில் திறந்தது வழி!
******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக