வெள்ளி, 29 மே, 2009

காகிதக் கப்பல்

பல்லவி

காகிதக் கப்பல் காத்திருக்கிறேன்
மழையே வருவாயா...
காற்றே பட்டம் வானமளக்க
வரங்கள் தருவாயா...

இருபக்கம் தானே காகிதம் என்றால்
ஒருபக்கம் நானல்லவா – அதன்
மறுபக்கம் நீயல்லவா...
(காகிதக் கப்பல்…)

சரணம் – 1

வெள்ளைத் தாளாய் விரிந்திருக்கிறேன்
ஓவியம் வரைவாயா
கவிதைகள் புனைவாயா...
செய்தித் தாளாய் சுமந்து நிற்கிறேன்
தகவல்கள் படிப்பாயா
மணமகள் தேவையா...
கேள்வித் தாளாய் உன் கையில் நானடா
தேர்வுத் தாளில் பதில்நீயும் எழுதடா...
(காகிதக் கப்பல்…)

சரணம் – 2

புத்தகம் என்னை புரட்டிப் படித்து
வாசகன் ஆவாயா
வேடிக்கை பார்ப்பாயா...
கடித மடலாய் உன்னிடம் வந்தேன்
பதிலொன்று எழுதிடுவாயா
வாழ்த்தட்டை பரிசளிப்பாயா...
சான்றிதழ் உனக்கு என்றும் நானடா
அழைப்பிதழ் அச்சிட அட்சதை போடடா...
(காகிதக் கப்பல்…)

******

புதன், 27 மே, 2009

காளை கண்

நெஞ்சு சளிக்கு நல்லதென்று
அதிக மிளகுத் தூளோடு
மித சூட்டில் பரிமாறப்படுகிற
ஆஃப் பாயில்களை
உடைந்து ஒழுகாமல்
சாப்பிடத்தெரியவில்லை-

நான் குடிகாரன்?
******